Followers

திருக்குறள்

Wednesday, November 16, 2011

தந்துவிட்டுப்போ….

தவறு செய்த பின்
உதட்டை கடிப்பதென்ன‌
உனக்கு நீயே
கொடுத்துக்கொள்ளும் தண்டனையா?
அதுவாயின்…
தவறுகளை மட்டும் நீ செய்,
தண்டிப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்.

#

உனது தேகப்புள்ளிகள் இணைத்து
நாக்கோலம் ஒன்று வரைகிறேன்,
வெட்கப்பட்டு நீயே
வர்ணங்கள் சேர்த்துக்கொள்கிறாய்.

#

நிசி தோறும்
இமை விளிம்பில்
திரண்டு நிற்கும்
கண்ணீருக்கு சொல்லவாவது
நம் பிரிவுக்கான
ஒரே ஒரு காரணம்
தந்துவிட்டுப்போ….

#

காதலிக்கிறேன்…
உன் விழியில்
பிறக்கும் திவலைகளுக்கு
என் கன்னத்தில்
கல்லறை அமைக்கிறேன்.
நிச்சயம் காதலிக்கிறேன்…

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.