Followers

திருக்குறள்

Wednesday, July 25, 2012

திருவிழாவுக்கு போகிறீர்களா… ஒரு நிமிடம் !..

அதிர அதிர இசை கேட்கும் விருப்பமுடையவர்களா நீங்கள் ? காதில் ஹெட்போன் மாட்டி உச்ச பட்ச இசையைக் கேட்பவர்களா நீங்கள் ? திருவிழாக்களில் கடவுளே பயந்து ஓடுமளவுக்கு சத்தமாய் பக்திப் பாடல்களை மெய்மறந்து கேட்பவரா நீங்கள் ? உங்களுக்காகவே யூ.கே யிலிருந்து வந்திருக்கிறது இந்த புதிய ஆராய்ச்சி.

திருவிழா அலறல்கள், அதிக சத்தத்தில் கேட்கப்படும் பாடல்கள், இவை காதைச் செவிடாக்கும் அபாயம் உண்டு என எச்சரிக்கிறது இந்த ஆராய்ச்சி.

குறிப்பாக இன்றைய இளைஞர்களிடையே பரவி வரும் இரவு விடுதி ஆட்டங்களும், அதில் போதையுடன் கேட்கும் நூறு டெசிபல்களையும் கடந்த உச்சஸ்தாயி இசையும் காதுகளை முடமாக்கி விடுகிறதாம்.

சுமார் 2700 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக சத்தத்துடன் இசை கேட்பவர்களில் 80 விழுக்காட்டினருக்கு காதுகளில் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

அதிக சத்தத்துடன் இசை கேட்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும், முடியாத பட்சத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இசைப் பிரியர்களை இந்த ஆராய்ச்சியை நடத்திய மருத்துவர் எம்மா ஹாரிசன் தெரிவிக்கிறார்.

இன்றைய இளைஞர்களின் காதில் ஆறாவது விரல் போல எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும் ஹெட்போன்களில் 80 டெசிபலுக்கும் அதிகமான சத்தம் வருகிறது எனவும், 80 விழுக்காடு இளைஞர்கள் அதிக சத்தத்தில் பாட்டு கேட்பதையே விரும்புகிறார்கள் எனவும் ஒரு ஆராய்ச்சி ஏற்கனவே முடிவு வெளியிட்டிருந்தது.

செல்பேசிகளும், எம்.பி.3 கருவிகளும் மலிந்து விட்ட இந்த காலத்தில் காதுகளைச் செவிடாக்கும் ஆபத்தையும் கூடவே சுமந்து வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

அதிக சத்தத்தில் பாடல் கேட்பது, தொடர்ச்சியாக நிறைய நேரம் பாடல் கேட்பது, அதிக சத்தம் ஏற்படுத்தும் பொது விழாக்கள், திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்வது போன்றவற்றை தவிர்ப்பதே (குறைந்த பட்சம் சத்தத்தை விட்டு தூரமாய் நிற்பதே)
காதுகளுக்காய் நாம் செய்யும் ஆரோக்கியமான செயல் ஆகும்

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.