Followers

திருக்குறள்

Wednesday, September 5, 2012

தேரும் கடவுளும்!!!

அமர்க்களமாய்த்தேர்,

உள்ளிருந்தகடவுளுக்கோ

ஆவல்!

வருடத்தில்ஒருநாள்தானே

ஊரைச் சுற்றிபார்கிறார்!

 

அனைவரதுமுகத்திலும் மகிழ்ச்சி

தேரை இழுக்கப்போவதால்!

அனைவரும்இழுத்தனர்.

நடுவீதியைஅடைந்தது தேர்.

அதற்குப்பின்தான் குழப்பமே

யார்வீதியில்முதலில் இழுத்துச் செல்வதென்று!

 

ஒருமேல்சாதிக்கும்,

மற்றுமொருமேல்சாதிக்கும்

வாக்குவாதம்.

 

சூடத்தை ஏந்திய

கைகளில்

அரிவாள்களும், கத்திகளும்

நடுங்கினார்கடவுள்.

தவறுதலாய்த்தன்னை

ஒரு சாதியாய்நினைத்து

மற்ற சாதியினர்

வெட்டிவிடுவார்களோ? என்று.

 

முடிவாய்க்கடவுளிடமே

கேட்டனர் மக்கள்,

"யார் வீதியில்

முதலில்இழுத்துச்செல்வது?"

 

"மனிதர்கள் இருக்கும் வீதியில்

முதலில்இழுத்துச்செல்லுங்கள்"

கடவுளின் பதில்.

 

அனைவருக்கும்ஒரே குழப்பம்

மனிதர்கள் எந்தவீதியில்

இருக்கிறார்கள்???

 

கடவுளின் பதிலால்

நடுத்தெருவில்

அனாதையாய்

தேரும், கடவுளும்!!

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.