Followers

திருக்குறள்

Tuesday, October 5, 2010

காதலில் மட்டும்தான்


 

உன் மனதில் பட்டதை
சொல்லிவிட்டாய்

இது தெரிந்தால்
என் மனம்தான்
படாது பாடு
படப்போகிறது

அதற்கு
உன்னை காதலிக்க
மட்டும்தானே தெரியும்

நீ கைவிட்டது
தெரியாதுதானே…

பரவாயில்லை
நீ விட்டுப்போனது
என்னை மட்டுமாக
இருக்கட்டும்

என்
மனசாவது நீ
காதலிப்பதாய்
நினைக்கட்டுமே

அதாவது
அழாமல் வாழட்டும்…

இந்தக்
காதலில் மட்டும்தான்

ஏமாற்றியவரே
ஏமந்து போவது


  
 
 


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.