Followers

திருக்குறள்

Monday, February 7, 2011

சிக்கலாகிப் போனது


நம் நட்பு தூங்கிக் கொண்டு
நான் விழித்திருந்த
ஒரு கனவுப் பொழுதில்
எனக்குள் விழுந்தாய்.

 எனக்கானவள் யாரெனத் தேடி
 உனக்கானவன் நானென்ற முடிவில்
 எனக்குள் விழுந்தது காதல்.

 என் காதல்
 உன் நட்பை உரசிய
 கனமான கணத்தில்
 நானும் உனக்குள் விழுந்தேன்.

 கற்பனையில் கருவாகி
 கவிதையில் உருவாகி
 உனக்குள்ளும் விழுந்தது காதல்.

 நீ,
 நான்,
 நம் காதல்
 சந்தித்தப் புள்ளியில்
 கோலமிட ஆரம்பித்தது காலம்.
 கோலத்தில் சிக்கி
 சிக்கலாகிப் போனது
 நம் காதல் வாழ்வு.

 பிரிவும் துயரும்
 தற்காலிகம் என்றிருந்தேன்.
 நினைவுகளைப் போல
 அவையும் ஆயுற்காலிகம் என்றபடி
 தொடர்பறுத்து விலகினாய்.

 இருவருமே சுயநலவாதிகள் தாம்.
 என் சுயமாக எப்போதும் நீ.
 உன் சுயமாகவும் நீயே!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.