Followers

திருக்குறள்

Monday, July 18, 2011

காதலுக்கு துரோகியாகிறேன்.

 
'உன்னைவிட்டுப் பிரிந்தாலும்
உன் நினைவுகளை
எடுத்துச் செல்கிறேன்' என்கிறாய்.
இந்தா என் உயிரையும் எடுத்துசெல்.
 
என்னை எப்பொழுது
பார்ப்பாயென
காதலில் ஏங்கித் தவித்தக் கண்கொண்டு
உன்னை எப்படிப் பார்ப்பேன்?
பிரியப் போகிறாயெனத் தெரிந்தபின்…
 
பிரியமாய் இருப்பதால்தான்
பிரியாமல் இருப்பாயென 
நம்பி ஏமாறுகிறதோ மனது?
 
நீ பிரிவுக்கு அஞ்சாமல்,
உலகுக்கு அஞ்சிப் பிரிந்துவிட்டாய்.
நானோ துயருக்குத் தோழமையாகிறேன்.
காதலுக்கு துரோகியாகிறேன்.
 
பிரிந்துவிடலாமா எனக்கேட்கத் துணிந்த 
உன் கல் நெஞ்சில் மறுபடியும்
என்ன சுரக்குமெனக் காத்திருக்கிருக்கிறேன்?
காதல் நீரா? கானல் நீரா?
 
உன்னைப் பிரிந்தபின்
நானும் கூட வாழ்ந்திருப்பேன்
உயிருள்ளப் பிணமாய்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.