Followers

திருக்குறள்

Wednesday, September 5, 2012

ஒரே நாளில் பணக்காரனாக! வீடு, கம்பேனியை ஒரே நாளில் முன்னேற்ற!

 கேட்டுக்கோங்க மக்களேவீடு, கம்பனி இதையெல்லாம் ஒரே நாளில்முன்னேற்றுவது என்பது சாதாரண விசயமில்லைஆனால் கீழ்காணும் அறிவுரைகளைபின்பற்றினால் உடனே ஒரே நாளில் முன்னேறிவிடலாம்.

 

  • முதலில் கடிகாரத்தை 10 நிமிடம் அதிகப்படுத்திவைக்கவும். இதனால் நம் கம்பேனி மற்ற கம்பனிகளைவிட பத்து நிமிடம் முன்னாடிபோய்க்கொண்டிருக்கும்! (எப்பிடி உடனே முன்னேற்றி விட்டோமா??)

 

  • கிழக்கு பார்த்து இருக்கும் கதவைஇடித்துவிட்டு, தெற்கு பார்த்த மாதிரி வைக்கவும் (எப்பிடி பூகோள ரீதியா முன்னேறிடுச்சா?)

 

  • எல்லோரையும் டை கட்டிவிட்டு வேலைக்குவரச்சொல்லவும்! (ஏன்னா டை கட்டுறவன் எல்லாம் நன்றாக வேலை செய்வான்!)


 

 

  • அலுவலக கண்ணாடிகளை ஸ்டிக்கர் கொண்டுமறைத்திடவும்! (அப்பறம் எதுக்கு கண்ணாடின்னு கேட்கப்பிடாது). இப்ப உங்களை யாராவதுபார்க்க வேண்டுமென்றால் கண்ணாடிக்கு மிக அருகில் வந்துதானே பார்க்க முடியும்!அப்படின்னா நீங்க அவங்களை விட்டு தூரமா முன்னேறிட்டிங்கன்னு அர்த்தம்!

 

  • வடகிழக்கு மூலையில் இருக்கும் கழிவறையை இடித்துவிட்டு தென்மேற்குமூலையில் வைக்கவும் (வெளிய போறதுதானே எந்தப்பக்கம் போனாத்தான் என்ன? என்றெல்லாம்பேசக்கூடாது!)

 

  • வீட்டின் உட்பகுதியில் உயரத்தை கூட்டவும். உயரமா வாழ்ந்தாத்தான்சீக்கிரமா உயர முடியும்!

 

  • அமரும் அலுவலக டேபிளை யாருக்கும் தெரியாதவாறு, உங்களை மறைத்தவாறுமாற்றிவிடவும்! (உங்கள் வளர்ச்சி யாருக்கும் தெரியாது, தடுக்க முடியாதில்லையா?)

 

  • இதையெல்லாம் நகைச்சுவை என்று கருதுபவர்களுக்கு! நூற்றில் என்பதுசதவிகிதம் வீடு, கம்பெனிகள் இதில் குறைந்தபட்சம் ஏதாவது இரண்டையாவதுகடைபிடிக்கிறார்கள்!



இப்ப உங்களுக்கும் முன்னேற ஆசை வந்திடுச்சா? பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.