
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
காதல் கவிதைகள் Tamil kadhal kavithaigal,our complete source for latest tamil puthu kavithai in tamil, tamil poem in tamil, tamil poetry in tamil, tamil puthu kavithai, tamil kavithai gallery,Kadhal kavithaigal
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையில்
வாழ்வின் சில குறியீடுகளாக
காதல்…!
தொலைவாகிப்போகும்
புள்ளிகளாக…
ஒரு விளிம்பில் நான்
மறுவிளிம்பில் அவள்
காலங்கள்
கனவாய்ப் போனபின்
நெருப்பில் நின்றுகூட
நீ…
அழக்கூடும்…!
கண்ணீரைப்போலவே
காதலும்
கணத்தின்பாதியில்
உன்…
கண்முன்னே கருகக்கூடும்…!
ஒரு இனந்தெரியாத இராகம்
நரம்புகளில் வீணைமீட்ட
ஒரு மர்மசோகம்
ஓடிவந்து மனசைத்தாக்க
அப்போது…
யார் அழுவார் – உன்
நெஞ்சின் சோகம் தீர்க்க…???
பூக்களுக்கும் முட்களுக்கும்
இடையில்…
சிறியதூரம்தான்
சில சமயங்களில்…
முட்களின் தூரம்வரைத்தான்
உன்னால் பயணிக்கமுடியும்
காயங்களுக்கு நடுவில்
பிரிவுகளும்…
சிலநேரம் வசப்படலாம்
யாருடைய பிரிவையும்
யாராலும் தடுக்கமுடியாத நிலையில்…!!!
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
நீயும் நனைந்தாய்
நானும் நனைந்தேன்
நம்மோடு சேர்ந்து
தானும் நனைந்து
நடுங்கியது மழை!
*
அடித்து பெய்யும்
மழையில் கரைகிறது
ஏதாவது ஒரு காதலின்
கண்ணீர்!
*
மழை
மழையை மட்டும் கொணர்வதில்லை
சில நேரங்களில்
சில தேவதைகளையும்!
*
நனைந்து சுகித்திருந்த
உன்னை அம்மா
இழுத்துப் போக
சோவென அழத்தொடங்கியது
மழை!
*
சைவமான என்னை
அசைவமாக்கிப் போகிறது
உன் மேல் விழும்
மழைத்துளி!
*
மழை
உன் அருகாமையில்
அருமையாகவும்
தூரத்தில்
அவஸ்தையாகவும்!
*
மழை வேண்டி
வருபவர்களையெல்லாம்
விரட்டியடித்தபடி இருக்கிறான்
கடவுள்!
படிப்பிற்காக வெளியூரிலிருக்கும்
உன்னை ஊருக்குள்
அழைத்து வரும்படி!
*
ஊரிலிருந்து
நீ வருவாயென
நேற்றே வந்து
வாசல் தெளித்துப் போயிருந்தது
மழை!
*
இன்றும் விடாமல்
பெய்தபடி
நீ
என்னைக் குடைக்குள்
அழைத்துக் கொண்ட
அவ்விரவின் மழை!
*
என் கவிதைகளுக்கு
என்ன மேன்மை கிடைத்திடக்கூடும்
உன் கையால்
மழை நாளில்
காகித கப்பல்களாவதைவிட!
*
மழை நின்ற
கணத்தின் இலைப்போல்
முகமெல்லாம்
திட்டுத்திட்டாய்
உன் முத்தங்கள்!
*
சிறுமழை
பெருமழை
எதுவும்
மழையை மட்டும் கொண்டுவருவதில்லை
உன் நினைவுகளையும்!
*
நம் உலகில்
நான்
நீ
பின், நமக்கான மழை!
*
நீ மழையாக
நான் துளியாக
மெல்ல பொழியட்டும்
காதல்!
*
முகிலின் நிராகரிப்பு
மழை!
உன்னின் நிராகரிப்பு
என் கண்ணீர்!
*
குழைந்தைகளுடன்
நீ நனைந்திருக்க
குதூகலமாய்
பொழியத் தொடங்கியது மழை!
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
நான்
நானாக இருக்க
முக்கியகாரணம்
நீதான்……
………………………………………………
ஜீபூம்பா மாதிரி
நேரங்களும்
நொடிகளும்
நிமிடங்களும் செல்கின்றன…
உன்னோடு நான் பேசுகையில்….
……………………………………………………..
எத்தனை தவறுகள் செய்தாலும்
உன்னிடம் மட்டும், நான்
உண்மையாகவே
இருக்கவிரும்புகின்றேன்…..
……………………………………………………….
முடியாது என்று தெரிந்தும்
விடாமுயற்ச்சியுடன்
என்னையும் அழகு படுத்து
முயற்ச்சிப்பவள் நீதான்….
……………………………………………………
நீ
எனை தொட்ட
நொடிகளில்
லேடிஸ் பிங்கரின் அர்த்தம்
முழுதாய் விளங்கியது…
…………………………………………………..
எதைகண்டு
மயங்கினாய் என்னிடம்?
லேசானநகைச்சுவையும்,
பளிர்சிரிப்பையும் தவிர,
என்னிடம் என்ன இருக்கின்றது???
………………………………………………………..
சில நேரங்களில்
பயங்கர கோபம்வரும்
உன்மீது….
உன்னைஅழ வைக்க
எனது மனம் கணக்கு போடும்…
சாத்தியமில்லாத செயல், என்று
சிரிக்கின்றது…
எனது மனசாட்சி…
…………………………………………………..
மாதத்தில் இரண்டு பீரை
ஒன்றாக குறைத்த சர்வாதிகாரி
நீதான்….
…………………………………………….
நீ
நானாக இருப்பதால்,
நான் நானாக இல்லை…
……………………………………………..
உன்னிடம் மட்டும்
முடியாது என்று தெரிந்தும்…
முடியும் என்று ,
பந்தயம் கட்டுகின்றது
என் இளகிய மனது…
………………………………………………
நீ
என் மடியில்
தலைசாயும் போதுதான்..
பல
கூடுதல் பொறுப்புகள்
நினைவுக்கு வந்து தொலைக்கின்றன….
………………………………………………….
அரைமணிநேரம்
என்வாயில்
அரைபட்ட
சூயிங்கம் கூட
உனக்கு அல்வாதான்….
…………………………………………………….
கண்ணெதிரே
கூடுதல் சுவை சேர்க்கபட்டது
நீ
கடித்து கொடுத்த,
சாக்லெட்டில்…
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |